January 14, 2017

கோழியின் புலம்பல்




ஏர் உழும் மாட்டுக்கு
பொட்டும் பூவும் வச்சு
பொங்கல் படைச்சு
மறு நாள் பாலுக்கு
விட்டு வச்ச மனுசன்
முட்டையை முழுங்கியதும்
மிச்சமிருக்கும் எங்கள
கூறு போட்டு  பிரியாணியாக்கும்
வன்முறையிலிருந்து மீளவாவது
குட்டியிட்டு பால் சுரந்திருக்கலாம்.



4 comments:

  1. முட்டையிட்ட கோழியின் புலம்பலா?

    ”உங்களை மட்டுமா .... எங்களையும்தான்” என்கின்றன .....
    லாரிகளில் கேரளப் பயணம் செய்து கொண்டிருக்கும் மாடுகள்.

    ReplyDelete
  2. பால்சொரியும் மாட்டைக் கொண்டு ஏர் உழுகிறார்களா தெரியவில்லை. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. karuthukku nandri gmb sir and vai.go sir. :)

    ReplyDelete